பகவான் ரமணரின் கருணை

பகவான் ரமணரின் கருணை:

ஒரு நாள் இரவு பகவான் ரமணர் இரவினில் ரமணாஸ்ரமத்தின் பின்புறம் இயற்கை உபாதியை கழிக்க சென்றார். அவருடன் எப்போதும், எங்கும் கூடவே செல்லும் அணுக்கத்தொண்டர் சற்றே தூரத்தில் நின்று கொண்டார். சுமார் இருபது நிமிடங்கள் கழிந்தன. பகவான் வரவில்லை. சற்றே பதைத்து பகவானைத் தேடி சென்றவர், அங்கே கண்டது ...............

உடல் முழுதும் சொறி சொறியாய் .....தோல்கள் முடியிழந்து ........சொட்டை மற்றும் புண்களுடன் பார்க்கவே மிகுந்த அருவருப்புடன் உள்ள நாய் நோயுற்று .........பகவானை நக்கிக்கொண்டு இருந்தது. வாலை ஆட்டி, ஆட்டி.... மீண்டும் தன்னுடைய அன்பினை .......பகவானை நக்கி , நக்கி வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தது. பகவானும் அதன் அருகில் அன்போடு அமர்ந்த வண்ணம் அதற்கு தன்னை முழுதும் அனுமதித்து .........தடவி தடவி ...." போதுமாடா !....போதுமாடா !" இன்னும் வேண்டுமா?" என்ற தன்னுடைய கருணையை அளித்தார்.

அன்று இரவு .....கை, கால்களை அலம்பாமல் அப்படியே படுக்கைக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலை ஆசிரமத்தின் பின்புறம் அந்த நாய் இறந்து கிடந்தது. இதைப் பற்றி அணுக்கத்தொண்டர் இரவு நடந்ததும் பற்றி பகவானிடம் வினவ ......பகவான் அருளியது .....

" அவன் இரண்டு மூன்று நாட்களாகவே தன்னைப் பார்ப்பதற்கு ஆசிரமத்தினுள் நுழைய முயற்சிக்க முயன்றும், ஆசிரமத்து நாய்களும், மற்றவர்களும் அதனை துரத்தினர். அதன் முடிவும் நெருங்கியது , என்னை பார்க்கவேண்டும் என்ற அவனுடைய விருப்பமே அங்கு தன்னை செல்ல வைத்ததாகவும், அன்று இரவு அவன் தன்னுடைய அன்பை வெளிபடுத்திய
பின்னரே இறக்க வேண்டும் என்ற அவனது விருப்பத்தினை நிறைவேற்றியதாகவும்", பகவான் கூறினார்.

அதுமட்டுமல்ல, எந்த ஒரு விலங்கும் தன்னை' நாடி அண்டுவது ......என்பது .தங்களுடைய கர்ம வினையை நீக்கிக்கொள்ளவே என்றும் ......எந்த உடம்பினில் எந்த உயர்ந்த, பக்குவ ஆன்மா இருக்கும் என்பது அறிய முடியாது .....எனவே அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது, அவற்றுக்கு தீங்கிழைக்கூடாது என்றும் அருளினார்.

அந்த நாய் வடிவில் வந்த அந்த புண்ணிய ஆன்மா .. யாரோ ? எவரோ!.....என்ன பேறு பெற்றதோ . ........பகவானை அண்டி ......கடைசி நேரத்தில்.......தமது அன்பினால் பகவானை ஈர்த்து ....அவரது அருள் பெற்று முக்தியடைய ...........என்ன தவம் செய்தனை ....!