இடா்களை களையும் இடும்பன் சுவாமி சுப மந்திரம்

இடா்களை களையும் இடும்பன் சுவாமி சுப மந்திரம்!!!

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "
கூப்பிட்டக்குரலுக்கு வரும் நம்மய்யன் முருகப்பெருமான் நம்மிடர்களைக் களைய நேரங்கள் கூடலாம், காரணம் நம்மைவிட மிகவும் தாழ்ந்தநிலையிலிருப்போரின் நிலைகளைக் கண்டு களைய சென்றிருப்பார். அதனால் அவரின் பாதுகாவலரான எமதய்யன் " இடும்பேஸ்வரன் " எமை சல்லியங்களிலிருந்தும், துர்தேவதைகளால் அவதியுற்றோரைக் காத்திடவும், யாம் கற்று பயனில் உள்ள சுபமந்திரமது. இது உரு கொடுக்க வேண்டியதில்ல. மும்முறை வாய்விட்டுச் சொன்னாலே போதும். பன்மடங்கு சக்தியைத் திரட்டி கதையால் தாக்குவார் துஷ்டசக்திகளை.
சுபமந்திரம்
சிங்காரமான திருமுடியழகும், முக அழகும், செஞ்சொல் வாய்மொழியழகும், காதுகளில் குண்டலமழகும், நெற்றியில் சிந்தூரப் பொட்டழகும், பாங்கான சதுர்ப்புஜங்களில் கைகள் அழகும், மார்பில் கவசவொளியினழகும், பூண்டிடு மிரத்தினப் பதக்கமும், திகழ் மார்பழகும், பொற்கையும் பீதாம்பரத்தினழகும், மங்காதப்பாதச் சிலம்பினழகும், வலியதண்டாயுத அழகுமய்யா, ஐம்பத்தோரட்சரமோதவே ஆடிவரும் பேய்கள் அபயமிட்டலறிப் பயந்தொடுங்கி ஓடிடவே திருத்தணி மலையினில் விளையாடும் மந்திர ஓங்கார சொரூபா வங்காள மலையாள கருப்பா இருளா அன்பர்கள் வணங்கிடும் குலசேகரா மகிமையுள்ள முருகரிடம் முன்பூசைக் கொண்டிடும் வீரவல்லிடும்ப சுவாமியே வந்தருள் புரிகுவாயய்யனே.