விண்வெளிக்கும் திருநள்ளாறுக்கும் எப்படி தொடர்பு?

விண்வெளிக்கும் திருநள்ளாறுக்கும் எப்படி தொடர்பு?

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்று, பிறகு வழக்கம்போல் வானில் பயணத்தைத் தொடர ஆரம்பித்தது.

எந்தவித பழுதும் அந்த செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படவில்லை. கீழே நாசாவிலிருந்தும் எந்த உத்தரவும் அளிக்கப்படவில்லை. ஆனால், அந்த செயற்கைகோள் அந்த இடத்தில் மட்டும் நின்று, பிறகு பயணத்தைத் தொடர்வானேன்?

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு, நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியா வின் புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு மேல் நேர்க்கோட்டில் உள்ள வான் பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன!

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் கண்ணு க்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோயிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சியின்போது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. ஆனால், அவ்வாறு அப்பகுதியைக் கடக்கும் செயற்கைகோள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த திருநள்ளாறு தலம்தான் சான்றோர்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறுக்கு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

இந்த செய்தி நம்முடைய முன்னோர்களின் பேராற்றலை எண்ணி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. செயற்கைகோள் என்ற ஒரு விண் ஆராய்ச்சிக் கலனைப் பற்றி சிறிதும் அறியாத
நம் முன்னோர்கள், சனி கிரகத்தின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அங்கே ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீச்சுகள் அதில் அதிகம் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனிப்பெயர்ச்சி என்று அறிவித்த திறமை பெரிதும் போற்று தலுக்குரியது.

அது மட்டுமல்ல நவகிரகங்களுக்கு அணிவிக்கும் துணிகளின் நிறத்தைக்கூட அந்தந்த கோள்களின் நிறத்திலேயே அணிவிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்த நம் முன்னோர்களின் பெருமையை என்னென்பது!இப்படி ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை இந்த சனிப்பெயர்ச்சி நாளில் நினைவிலிருத்தி அவர்களுக்கு நன்றி சொல்வோம்.