ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம்

ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த குரு பரம்பரை.
குரு பரம்பரை
ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின் அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர். குருவிற்க்கெல்லாம் குருவானவர். எப்போதும் வாழும் அவதாரமும் ஆவார். குரு பரம்பரை என்பது தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார். இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
ஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரை. நமது சத்குரு ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின் கடைசி குரு ஆவார்.
குரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்தபதிவில் காண்போம்.
1.ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா. (1300 A .D )
ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம். தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா,தாய் பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம் கோதாவரியில் உள்ள பித்தாபுரத்தில் பிறந்தார். தனது பாதங்களில் சங்கு சக்கர முத்திரைகளை கொண்டந்தாலேயே இப்பெயரால்அழைக்கப்பட்டார்.
2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)
கலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரமாகும்.
தந்தை ஸ்ரீ மாதவ்,தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம் கரஞ்சபூரில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் 'என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தவர்.
3.மாணிக் பிரபு.1817 A .D
தந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, தாய் ஸ்ரீ பய தேவி,தொடர்ந்து16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக, குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக உறுதியளித்து, மகாராஷ்டிராமாநிலம், கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில் பிறந்தார். தனது 48 வது வயதில் ஜீவசமாதி அடைந்தார்.
4.அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.
ஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம். இவரின் பிறப்பு தாய் தந்தை பற்றியகுறிப்புகள் இல்லை. குருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ ந்ரசிம்மசரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து ஒருமரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாகவிழுந்தது. அங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக புருஷரே ஸ்ரீ தத்தரின்அடுத்த அவதாரமாக ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.
5.சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்பாபா.
ஸ்ரீ தத்தரின் கடைசி அவதாரமே, ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. இவரை பற்றியோ, இவரது லீலைகளை பற்றியோ வார்த்தைகளால் யவராலும் விளக்க இயலாது.
எனினும் அவரின் 11 உபதேச மொழிகளை இங்கு பதிவு செய்கிறோம்.
1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.