பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம் !

கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.

பெண்களின் கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்
திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும். மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும் தரிசனம் செய்யவும்.

பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும்.

சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும்.

இத்தகையோர் வியாழக்கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் சொல்லி பிஸ்தா பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளித்து வந்தால் அவசரமாக எடுத்த முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வழி பிறக்கும்.