நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம்

நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் ...!!!

ஆலயங்களில் நடக்கும் அன்றாட நெய்தீப ஊழல் …..
ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின்
பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், பற்றியது இது …
இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு இப்போ தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:
அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற அதன் நிறம், தோற்றம் கொண்ட திடமான
“பசை”யானது, சைவ மற்றும் அசைவ
பண்டக உணவகங்களில்
உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை உபரியாக இலவசமாகவோ, மிகக் குறைந்த
விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி,
விவரம் இல்லாமல் மீண்டும் மீண்டும்
கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு,
மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை
மெதுவாக கலந்து விளக்குகளில் அடைத்து,
”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை”
பொது மக்களின் பணத்தினை குறிவைத்து பொது ஏலம் எடுத்தவர்கள் விற்பனை செய்து,
கோடிக்கணக்கில் (இருக்கலாம்)
கொள்ளை அடிக்கின்றார்கள் …
முதலில் இந்த கடைகளில்
இப்படிஉள்ள நெய்் விளக்குகளை
ஒருநாளாவது முகர்ந்து
ஒருவராவது பார்த்து இருக்கின்றீர்களா?
ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா?
ஒக்கார்ந்துயோசித்தால்இன்றைய நாளில்,
ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை
ஒரு கிலோ, 500 முதல் 550 ரூபாய் வரை.
ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக ஒருவர்75 விளக்குகளை ஏற்றுவதாக
வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும்.
ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு அதுஎப்படி,ஆலயங்களில் இவர்களால் .......?
உண்மையான பசு நெய் கொண்டு ,ஏற்றப்படும் உன்னத விளக்கின் ஒளி,
ஒரே சீராக வெள்ளை
ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும் .
அந்த ஒளி வெள்ளத்தில்,
அந்த இடத்தில் உள்ள காற்று
தூய்மையாகி, பிராண வாயு
தூயதாக கிடைக்கும்
ஆனால் இந்தமாதிரி,தரமற்ற “பசை விளக்குகள்” அதுவும்சரிவர எறிவதும் இல்லை,
அதோடு ஒருவித நாற்றமும்
அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும்
வெய்யிலில் ,நமது
உடம்பே உருகி விடும்போல் இருக்கி்ற நிலையில், உள்ள இந்த “பசை விளக்குகள்” அக்னி
வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி வெளிச்சமாகஇருப்பதை கவனியுங்கள்.
முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், முற்றத்தில்பசுவினை வளர்த்து,
அதன் பாலில் இருந்து, தயிர்,
அதன் பின்வெண்ணை, நெய் முதலானவற்றை
ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகம்
ஆகினார்கள். .பின்னர் கால ஓட்டத்தின்
காரணமாக,
கடைகளில் இருந்து “வெண்ணை”
வாங்கி காய்ச்சி, உருக்கி ,அதில் இருந்து
வந்த நெய்யை உபயோகப்படுத்தினார்கள்,
பின்னர்
கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு கொளுத்தினார்கள் ..
நாள்பட பசு நெய் என்பது
நாளடைவில்மறைந்து,
பல வண்ண டப்பாக்களில்,
பல வித பெயர்களில் கடைகளில்
விற்கப்படுகின்றது
விவரம்தெரியாதவர்கள் வாங்கி
“நெய்யினைக்” கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்பொழுது ,நெய் வாங்கி விளக்கு
ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், ஏதோ வசதியின் பொருட்டும், தற்பொழுது
ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் அக்கிரமமாக, “பசை விளக்குகளை ” வாங்கி,
பயபக்தியுடன் இறைவனுக்கு விளக்கேற்றி
பக்தர்கள்(?) வழிபடுகின்றனர்
பக்தர்களே, நீங்கள் கோயில்
பயனுள்ள வழிபாட்டிற்கென்றே விளக்கு, நெய்,
நல்லெண்ணெய், திரி, தீப்பெட்டி, கை துடைக்க நல்ல துணி, விபூதி, குங்குமம் போட்டு கொள்ள
zip lock
கவர்கள் முதலிவை கொண்ட ஒரு “சிறிய கோயில் பை” வைத்திருந்து எப்போது எந்த கோயிலுக்கு
சென்றாலும் அதை எடுத்துச்
சென்று உபயோகியுங்கள்.
அதுதான் சிறந்தது, மிகவும்
அதிக பலனளிக்க கூடியது .
அதை விட்டுவிட்டு, இந்த மாதிரியான
அந்த கோயிலின் உள்ளே கடைவிரித்த
போலி வியாபாரிகளின், கொள்ளையடிக்கும் நோக்கத்திற்கு, பலியாகி, அவன் விற்கும் “பசை
விளக்கினை” நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு,
விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டு
விட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில்
தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டு போவது அல்ல பக்தி என்பதை நினைவில்
கொள்ளுங்கள், நாம் கோயிலுக்கு
செல்வதே பாவங்களை தொலைக்கத்தானே
இந்தமாதிரி போலியான .சாஸ்திர விரோதமான இப்படி பொய் விளக்குகளை வாங்கி,
மேலும்
மேலும்
அந்தபாவ செயல்களை செய்ய வேண்டாம்.
அவன் ஏமாற்றினால் அவனுக்கு ஆண்டவன்
தண்டனை கொடுப்பான் என்று ,
தவறு செய்பவனின் செயலுக்கு நியாயம்
சொல்வது
சரியாசொல்லுங்கள்..
நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், நயமாக பணத்தினை கொண்டு அனைத்தையும்
வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான
வழக்கம்சிஇல்லா சிந்தனை ஒன்றே
இன்று ஆலயங்களில் கூட
இப்படி ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக்
காரணமாக இருக்கிறது என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்…
மேற்கூறிய அனைத்து விவரங்களும்
நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் நிச்சயமாக பொருந்தும்..