*அப்பனே ஆலவாயனே*

*அப்பனே ஆலவாயனே*

_கருவில் சுமக்கும் தாயைப் போல ..._

_மார்பில் சுமந்து கொள்ளும் தந்தையைப் போல ..._

_பாசப்பிணைப்பில் தினம் தினம் சண்டையிடும் சகோதரன் போல ..._

_அன்புக்கரம் நீட்டி அணைத்துக் கொள்ளும் தோள் கொடுக்கும் தோழனைப் போல ..._

_கல்விச் சீலன் எனச் சொல்லும் அளவுக்கு என்னைப் பட்டை தீட்டிய குருவைப் போல ..._

_மொத்தத்தில் என் உடலைச் சுமக்கும் உயிரைப் போல ..._

_எனக்குள் இருந்து எமைச் சுற்றி சுற்றி என்னைக் காக்கின்ற பரம் பொருளே .._

_ஜோதிச் சுடரே_
_கருணைக் கடலே .._
_திருநீலகண்டனே ..._

_என்னுடன் நீ இருப்பதால் தோல்விகள் கூட தோற்றுப் போய்விடும் ..._

_வெற்றிகள் தானே வரும்... புகழ்கள் தேடி வரும்..._

_அப்படிக் கிடைக்கும் மாலைகளும் வெற்றிகளும் எல்லாப் புகழும் என் தலைவன் ஒருவனுக்கே... எமையாளும் ஈசனுக்கே..._

*வாழ்க நமச்சிவாயம் ...*

*ஓம் நமசிவாய*
*ஓம் நமசிவாய*