ஓம் நமசிவாய

# # ஓம் நமசிவாய # #

#திருச்சிற்றம்பலம்

#காலையிலும்_மாலையிலும்_சொல்லுவோம்_நமசிவாயம்

ஒன்று முதல் பத்து வரை ஓம் நமசிவாயம்.

ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய் !
ஓங்கார ஓசை தினம்  கேட்கும் என்பது உண்மையே !

ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய் !
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம் !

ஓம் நமசிவாய என்று மூன்று முறை  சொல்லுவாய் !
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே !

ஓம் நமசிவாய என்று நான்கு முறை  சொல்லுவாய் !
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே!

ஓம் நமசிவாய என்று ஐந்து முறை  சொல்லுவாய் !
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார் !

ஓம் நமசிவாய என்று ஆறு முறை  சொல்லுவாய் !
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார் !

ஓம் நமசிவாய என்று ஏழு முறை  சொல்லுவாய் !
ஏழு சுரமும் உன் நாவில் இழையும் என்பது சத்தியம் !

ஓம் நமசிவாய என்று எட்டு முறை  சொல்லுவாய் !
எட்டுத் திக்குப் பாலகரும் வாழ்த்தி அருளிச் செல்லுவார் !

ஓம் நமசிவாய என்று ஒன்பது முறை  சொல்லுவாய் !
நவகோளும் உன்னைச் சுற்றி நல்லதையே செய்திடும் !

ஓம் நமசிவாய என்று பத்து முறை  சொல்லுவாய் !
பத்துப் பத்தாய் புண்ணியங்கள் பற்றி வரும் சத்தியம் !

ஓம் நமசிவாய என்று அனுதினம் நீ   சொல்லுவாய் !
உனக்கு நன்மை உயிர்க்கு நன்மை உலகுக்கெல்லாம் நன்மையே !!

#திருச்சிற்றம்பலம்

# # ஓம் நமசிவாய # #