"குரு" வும் "வாழ்க வளமுடன்" வாழ்த்தின் பயனும்

"குரு" வும் "வாழ்க வளமுடன்" வாழ்த்தின் பயனும்

குரு ஒரு வழிகாட்டி. தவத்தை குரு மூலம்தான் பெற்று பழகுதல் வேண்டும், என்றாலும் குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவுதான், நீங்கள் செய்த கருமத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதை பெற வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க ஓங்க உங்களது மனதின் ஊடே உள்ள அந்த சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது. அந்த நேரத்திற்கு வருபவரை குரு என கொள்கிறீர்கள்.

”வாழ்க வளமுடன்”

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தால் அன்றி வாழ்த்தவே முடியாது, அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும் போது மனதுக்கு ஒரு வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுறுவி நிறைந்து அந்த உயிர்கலப்பு ஏற்படகூடிய நிலை, இவை எல்லாம் அதிகம் ஆகும்.

அந்த நுண்ணிய நிலையில் நாம் வாழ்த்து கூறும் போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டு பேருடைய அடித்தளமான அந்த உயிர் நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (Interaction) ஏற்படுகின்றது; ஊடுறுவி பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை, நாலுதடவை, செய்ய செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால் அது எப்போழுதும் நமக்கு அலைவீசிக் கொண்டு இருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்பு படி வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கும்; அந்த் தொடர் அறுபடாது இருக்கும். அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டி நினைப்பது, அவர்கள் நன்மைக்கா நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றி விட முடியும்; அவர்களுடைய செயல்களை திருத்தி விடமுடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றி விட முடியும்.

தவம் முடித்ததும் வாழ்த்த வேண்டும். தவத்தில் இருக்கும் போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் ”அல்ஃபா அலை” அதிர்வுக்கு வந்து விடுகிறோம், அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்து விடும். அந்த இடத்தோடு அங்கே இருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம்.

”வாழ்க வளமுடன்” எனற எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது. அம்பு இருக்கிறது. அடுதது அம்பு எய்வதற்கு ஒரளவு நாணை பின்னுக்கு இழுத்து விடுவது ஒன்று, கடைசி வரைக்கும் நாணை இழுத்து அம்பு விடுவது என்பது வேறு. எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதை கொண்டு வருகிறோமோ அங்கே இருந்து கொடுக்க கூடிய வாழ்த்துக்கோ, அல்லது சாபத்திற்கோ கூட வேகம் அதிகம், செய்லபடும் வேகமும் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த வேகத்தில் நாம் சொல்ல கூடிய சொல்லுக்கு, எண்ணக்கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாக செயலுக்கும் வந்து விடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதை செயல் படுத்துவதற்கு சில நாட்களானாலும் சரி, பிறகுக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.