பைரவர் வழிபாடு - கை மேல் பலன்

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் !!!
என் குருநாதர் சாய் பாபா உபாசகர்( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது
பைரவரை வழிபடும் முறை :

எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்
எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள் ,
பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய
முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள்
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என
எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்
ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்
இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம்
1) வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் விநாயக பெருமானை வணங்கி ( எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ) ஒரு சிதறு தேங்காய் உடைத்து விளக்கு ஏற்றி பிறகு பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கலாம்
தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி வணங்கி விட்டு பிறகு உள்ளே செல்லவும்
விநாயகர் இல்லையென்றால் ஆன்மிகமே இல்லை , எந்த வழிபாடும் முழுமையடையாது ( எவ்வளவு சிறப்பாக நாம் செய்தாலும் )
2) தினமும் பைரவருக்கு ஒரு (சாதாரண) விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்
3) தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 சாதாரண விளக்கு போட வேண்டும் , அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் . மத்த நாளிலும் ஏற்றலாம்
4) வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் சார்பாக ( அவர்களுக்காக ) அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டினை செய்யலாம்
விஷயம் இவ்வளவுதான் தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சின்ன விளக்கு ஏற்றி விட்டு பின் உள்ளே இருக்கும் பைரவருக்கு ஒரு விளக்கு ஏற்றனும்
பைரவரே கால சக்கரத்திற்கு அதிபதி , அனைத்து கோள்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் ( இயக்கத்திற்குள் ) வைத்திருப்பவர் ,
ஞாயிறு - சூரியன் கோளையும் ,திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய் கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன் கோளையும் , சனி - சனி கோளையும் கிழமைகளை ஆதிக்கம் செய்கின்றன
எனவே 7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள்
( ராகு , கேது கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென நேரம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது )
அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கம் பைரவரை வணக்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .
ஆகையால் தினமும் விளக்கு போட முடியாதவர்கள் ( தவிர்க்க முடியாத காரணத்தினால் ), வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும்

விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை
அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும்
வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும்
தெரியும் .
நாம் வேண்டுவது , பட்டியலிடுவது எதுவுமே நடக்காது , நமக்கு எதெல்லாம் அத்தியாவசிய தேவையோ அதுதான் ஒவ்வொன்றாக கிடைத்து கிட்டே இருக்கும் ( இத்தனை நாள் எல்லாம் கணக்கு கிடையாது , ஆனா கண்டிப்பா கிடைக்கும்/ நடக்கும் )
நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள் எல்லாமே நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் , நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம் எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும் .
இந்த வழிபாட்டோட பலனுக்கான அறிகுறி
உங்களுக்குள்ளான ,உங்களுக்கே தெரியாத உங்களுக்கு அத்தியாவசிய தேவையான ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) உங்களுக்குள்ள இருந்து வெளிபடும்
அந்த ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்கும் .
அதற்காக உங்களுக்கு அளவுக்கதிகமான விரக்தியும் , தேவைபட்டால் பெரிய அவமானத்தையோ அல்லது சிக்கலையோ கொடுப்பார் . அதை தீர்க்கும் வழிமுறையையும் அவரே வெளிகாட்டுவார் கண்டிப்பா உயிருக்கு எந்த பிரச்னையும் வராது . முன்பை விட ரொம்ப தெளிவாகவும் , பக்குவ பட்ட மன நிலையையும் அடைந்து இருப்பீர்கள் .
உதாரணத்துக்கு சொல்லனும்னா நமக்கு வேண்டியவர்கள் நமக்கு நீச்சல் கத்து கொடுக்கும் போது நம்மை கிணத்துல தள்ளி விட்டு கூடவே இருந்து நீச்சல் கத்து கொடுப்பாங்க, நம்மள உள்ள முழுக விடாமலும் பார்த்துக் கொள்வார்களே அது போலதான் இருக்கும் பைரவர் ஸ்டைல் .
உங்களால தப்பி தவறி கூட தவறான வழியிலோ , குறுக்கு வழியிலோ போக முடியாது .
இது தான் வாழ்க்கை , இப்படிதான் வாழணும் ன்னு தீர்க்கமாக ஒரு நல்ல முடிவு எடுக்க வைப்பார் , ஆறு மாசத்துக்கு ஒரு முறை அல்லது வருசத்துக்கு ஒரு முறை வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி கூட்டிட்டு போவார்
சுருக்கமாக சொல்லனும்னா நம்ம வாழ்க்கையை பைரவர் கையில் எடுத்து கொள்வார் , அவரே நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் , பைரவரே குருவாக இருந்து வழி நடத்த ஆரம்பிப்பார் . சூட்சம வடிவில் எப்போதும் கூடவே இருப்பார் , குருவாகவும் ( சூட்சம வடிவில்) இருப்பார் , இதை உணர கொஞ்ச காலம் ஆகும் , நிச்சயமாக இந்த வழிபாட்டை பின்பற்றும் அனைவராலும் இதை உணர முடியும்.
நம்முடைய கர்ம வினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ ) அனுமதிக்கவே அனுமதிக்காது , நிறைய தடைகளை ஏற்படுத்தும் , சோம்பேறிதனத்த உண்டு பண்ணும் , நாமே எதாவது காரணம் சொல்லிக்கிட்டு கொஞ்சநாளில் அப்படியே விட்டு விடுவோம் . இந்த மாதிரி தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அலட்சியபடுத்தி விட்டு நாம்தான் விடா முயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வர வேண்டும் . ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் , அப்பறம் சரியாகிவிடும் .
( இது நிறைய பேரோட அனுபவம் ).
ஆரம்பத்துல என் குருநாதர் இந்த தகவல சொல்லும்போது இதோட வலிமை தெரியாமல் ரொம்ப சர்வ சாதரணமாக நினைத்தேன் ,செய்துகொண்டே இருக்கும் போதுதான் வலிமையை உணர முடிகிறது .

ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் வரை விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வாருங்கள் . அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து வாருங்கள் .
தினமும் பசிக்கு சாப்பிடுவோமே அதை போல ஒரு அத்தியாவசிய தேவையாக இந்த வழிபாட்டை வாழ்க்கைக்கு மாற்றி கொள்ளுங்கள் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஏற்படும் , வாழ்கையை உணர ஆரம்பிப்போம் நிறைய நல்ல ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் இதற்க்கு கொஞ்ச காலம் தேவைபடும்
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .
காசியில் இருக்கும் பைரவரில் இருந்து நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன கோவில்களில் இருக்கிற பைரவர் வரைக்கும் எல்லா பைரவருக்கும் ஒரே சக்திதான்

நிபந்தனை :
ஆரம்பிக்கற நாள் வளர்பிறை நவமி , தேய்பிறை நவமி , பிரதமை திதி ஆக இருக்க கூடாது
அன்றைய தினம் உங்களுக்கோ , உங்க குடும்ப உருப்பினர்கள் நட்சத்திரத்திறத்திற்கு சந்திராஷ்டமாக இருக்க கூடாது
மிகவும் பொருத்தமான நாள் தேய்பிறை அஷ்டமி
ரொம்ப முக்கியமான விசயமே இதுதான் ,வழிபாட்டுல அலட்சியம் கூடாது , ஏன்னா அலட்சியதிற்கு நான் தண்டனை அனுபவிச்சி இருக்கேன் , ரொம்பவே கடுமையாக இருக்கும் .
திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போடணும் .விளக்கு போடும் பொது பைரவர் சிலை மூடி இருக்க கூடாது
(எந்த கோவிலும் , அந்த கடவுள் சிலை மூடியிருக்கும் போதோ / திரையிட்டு மூடி இருக்கும் போதோ / எதாவது தடுப்பு வைத்து மறைத்திருந்தாலோ / கோவில் கதவு சாத்தி இருந்தாலோ - வழிபடுவும் கூடாது , விளக்கு போடவும் கூடாது ,அப்படி செய்வதால் எந்தவித பலனும் இருக்காது -ன்னு குருநாதர் சொல்லியிருக்கார் )
அசைவமும் சாப்பிட்டுக்கிட்டு வழிபாட்டையும் தொடர்வது , தண்ணீர் தொட்டியில் ஒரு பக்கம் தண்ணீரை சேமித்துகிட்டும் , மறுபக்கம் தொட்டியின் அடைப்பை திறந்து வைத்திருப்பதை போன்றது இந்த அசைவம் சாப்பிடும் பழக்கம் , கடைசி வரை தண்ணீரை எப்படி சேமிக்க முடியாதோ அது போலதான் இதுவும் ( இது எல்லா வழிபாட்டுக்கும் பொருந்தும் )
கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது , பைரவரே நிறுத்த வைப்பார்
பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு),சனிக்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர்
ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:
தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்