குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய சுப மந்திரம்

குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய சுப மந்திரம் !!!

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.

(இப்பதிவு விருப்பமுள்ள சகோதர சகோதரிகளுக்கு மட்டும்)
குழந்தைகளுக்கு தோஷந்தாங்கி பிணியினால் அவதியுறும், அச்சமயம் பொருளாதார வசதியில்லாத பெற்றோர்கள். குழந்தையைத் தர்க்காவிற்கு அதிகாலையில் கொண்டு செல்வார்கள். பள்ளி வாசலில் அதிகாலையில் வரிசையில் நிற்பார்கள். முஹம்மதிய பெரியோர்கள் வேதமோதிவிட்டு இறைவனை வணங்கி வழிபட்டு வெளிவரும் சமயம், இறைவனும் அவர்களுடன் வருவார்கள். அச்சமயம் தோஷத்தால் பாதிக்கப்பட்டு வரிசையில் பெற்றோர்களின் கையில் இருக்கும் குழந்தைகளின் முகத்தில் வேதத்தையோதி , மும்முறை சிரசு முதல் பாதம் வரை, வாயால் காற்றை ஊதி இறக்குவார்கள். 3 நாள் அதிகாலை கொண்டு செல்வார்கள். அக்குழந்தை 4வது நாள் பிணியிலிருந்து விடுபட்டு, ஆரோக்யத்துடனிருக்கும். இதைப் பார்த்த எமக்கு அக்கடவுள் மீதும் தனிபற்றுண்டு என்று சொல்வதில் பெருமையாக இருக்கு. இதில் தான் நம் சகோதரத்துவம் பின்னி பிணைந்துள்ளது. அது போன்ற குழந்தைகள் பிணியில் அகப்பட்டு அகால நேரத்தில் அவதியுறும் நேரத்தில், தர்க்காவிற்கு குழந்தையை கொண்டு செல்ல முடியாது, அச்சமயம் கீழ்வரும் சுபமந்திரத்தை, மும்முறை சொல்லி கையால் சிரசு முதல் பாதம் வரை தடவி, பூமியில் தட்டிவிட குழந்தை நிம்மதியாய் இருக்கும்.

சுபமந்திரம்

ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதிவந்த பூதமுகம் மதுதன்னருளின கல்லால் கனலால் சட்டையிட்டேன். வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும் படைக்கப்பட்ட. சின்ன சைத்தான்களும் பலவித தோஷங்கள் விலகிடவும், இனிவாராமல் காவல் செய்தேன். இரவும் பகலும் ஹதாவில் பள்ளி அகம்புகுந்து கொண்டோம். மக்காவின் ஆணை, ஈசு நபியாணை தரைக்குரு நபியாணை, சுலைமாண் நபியாணை,நாலு வேதத்தின் ஆணை, நாற்பத்தியீராயிரம் நஸாபியாணை, பலவித தோஷங்களும் பட்டுவிட வேண்டும்.மூன்று அல்லாயிடத்தும் இறல்லாவத்தும் அமன் அல்லா எட்டு திக்கும் பதினாறு கோணமும் டும்டும் ரீம்ரீம் மங்மங் அக்குலா குலா இல்லல்லாஹி சுலைமான் சொல்.

என்று மானதமாக சொல்லி குழந்தைகளுக்கு மந்திரிக்க வேண்டும். எம் பாட்டனார் சொல்லிக் கொடுத்தது. யாமுள் கையாண்டு வருகிறேன. பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு. வருமானத்தை எதிர்நோக்கி அல்ல. குழந்தையின் மீதுள்ள கருணை உள்ளமே.